நாசாவுடன் இணைந்து நிலவில் செல்லுலார் டவர் அமைக்கும் பணிகளில் நோக்கியா ஈடுபட்டுள்ளது. நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் நாசாவின் Artemis திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விண்வெளி வீரர்கள், ரோவர்கள் இடையே தொலைதொடர்பு வசதிக்காக டவர் அமைக்கப்பட உள்ளது. விண்வெளியின் கடுமையான சூழல்களிலும் செயல்படும் விதமாக டவர் அமையும் என நோக்கியா தெரிவித்துள்ளது.