திருவாரூர், மார்ச் 6- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திராவிடர் கழக நகர செயலாளர் ப.நாகராஜின் தாயாரும், ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி செயலாளர் நா.ரேவதியின் மாமியாரும் ப.அஞ்சம்மாள் 2.3.2025 அன்று மறைவுற்றார்.
பன்னத் தெருவில் உள்ள அம்மையார் ப.அஞ்சம்மாள் அவர்களின் இரண்டு கண்களும் திருவாரூர் லயன் சங்கத்திடம் கொடையாக வழங்கப்பட்டது.
3. 3.2025 அன்று காலை 10 மணிக்கு பன்னத் தெருவில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுத மன், திருத்துறைப்பூண்டி நகரத் தலை வர் சு.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் சி.கலைவானி, மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.சுரேஷ்முரளி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அஜே.உமாநாத், திருத்துறைப்பூண்டி நகர மகளிரணி தலைவர் கி.கலாவதி, ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், கோட்டூர் ஒன்றிய தலைவர் எம்.பி.குமார், செ.ராமலிங்கம். மராச்சேரி சுரேஷ், செல்லப்பா, மற்றும் பன்னத் தெரு கிராம மக்கள், உற்றார் உறவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் எந்தவித மூடவழக்கமும் இல்லாமல் நடத்தப்பட்டது.