பெரியார் வீர விளையாட்டு

viduthalai
3 Min Read

பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராமகிருட்டிணன்-ஈஸ்வரி இணையரின் மகள் அஞ்சலி, கருவாக்குறிச்சி பிச்சைக் கண்ணு-ரதிமாலா இணையரின் மகன் கார்த்திகேயன் இருவருக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா ஒக்கநாடு மேலையூர் எம். எஸ். பி.திருமண மண்டபத்தில் 3.3.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.

கழகக் கொடிகள், பதாகைகள் மிளிர தமிழர் தலைவருக்கு வரவேற்பு

உரத்தநாடு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அய்யா சிலை அருகே மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமையில் பல்வேறு கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

இணை ஏற்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பவளவிழா வளைவு அருகில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.ஜெகநாதன் தலைமையில், ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், மா.துரைராசு ஆகியோர் முன்னிலையில் எழுச்சி முழக்கத்தோடு வரவேற்பு அளிக்கப் பட்டது.

நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு கழக இலட்சியக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. ஒக்கநாடு மேலையூர் கழகத் தோழர்கள் ஒவ் வொருவரும் தமிழர் தலைவரை வரவேற்று பதாகைகளை வைத்திருந்தனர்.

கழக சீருடையுடன் வெள்ளைத் தொப்பி அணிந்து இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் எழுச்சிமிகு வாழ்த்து முழக்கத்தோடு மண்டபத்திற்கு தமிழர் தலைவரை அழைத்து சென்றார்கள்.

மணவிழா அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவரை பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன் -ஈஸ்வரி இணையர் பயனாடைப் போர்த்தி வரவேற்றார்கள்.

மாநாடு போல் திரண்டு இருந்த ஊர் மக்கள் கரவொலி எழுப்பி தமிழர் தலைவரை வரவேற்றனர். பொறியாளர் ப.பாலகிருட்டிணன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புகளை கூறி மணவிழாவிற்கு தலைமை ஏற்று நடத்தித் தருமாறு முன்மொழிந்தார். அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வன் வழிமொழிந்தார்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் வரவேற்புரை யாற்றினார்.

ஒக்கநாடு கீழையூர் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ், ஒக்கநாடு மேலையூர் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் அ. சண்முகம் பஞ்சாயத்தார் சமயன்குடிக் காடு மு.தென்னவன், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அ.மு.மு.க தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் மா .தவமணிஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இணையேற்பை நடத்தி
தமிழர் தலைவர் வாழ்த்துரை

இணையேற்பை நடத்தி வைத்து தமிழர்தலைவர் கபடி நா. இராமகிருட்டிணனின் பண்பு நலன்களையும், ஒக்கநாடு மேலையூர் பொதுமக்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும், வரவேற்று சிறப்பிப்பதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பங்கேற்றோர்

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன், கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, மனிதநேயர் எஸ். எஸ். இராஜ்குமார், மேனாள் அமைச்சர் ஆர். காமராசு, அ.இ.அ.திமுக மாவட்ட செயலாளர் மா. சேகர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக அமைப்புச் செயலாளர் இராச ராஜேந்திரன், உரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளர்கள் கார்த்திகேயன், செல்வராசு, முருகையன், செல்லாரமேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.எஸ்.ஆர்.சங்கர சூரியமூர்த்தி, உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் கபடி நா.இராமகிருட்டிணன் நன்றி கூறினார்.
நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டர் நெடுவாக்கோட்டை ஜெயமணி பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்கினார்.
ஒன்றிய கழக துணைச் செயலாளர் வன்னிப்பட்டு செந்தில் குமார் கடலை பருப்பு அய்ந்துகிலோ வழங்கினார்.
ஒக்கநாடு மேலையூர் வை.சங்கர் கோழி ஒன்றினை பரிசளித்தார். ஏலம் விடப்பட்ட கோழியை கிளைக் கழகத் தலைவர் அ.ராஜப்பா ரூ. ஆயிரத்திற்கு பெற்றுக் கொண்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *