3 ஆண்டுகள் நிறைவு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41.38 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தமிழ்நாடு அரசு தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,மார்ச் 3- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந் த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு, தொழில்துறை பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தகவல் தொழில் நுட்பம், பசுமை எரிசக்தி, மொழி சார்ந்த தகவல் தொடர்பு திறன்கள், நிர்வாகம், கணினிப் பயிற்சி உள்பட பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மொழித் திறன், கணினி திறன்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த திறன்கள் கொண்ட திறன் பயிற்சிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது குறித்த பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 1ஆம் தேதியுடன், 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில், 41 லட்சத்து 38 ஆயிரத்து 833 மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
இதில், பொறியியல் மாணவர்கள் 10 லட்சத்து 91 ஆயிரத்து 22 பேருக்கும், கலை மற்றும் அறிவியல் கல்வி மாணவர்கள் 25 லட்சத்து 63 ஆயிரத்து 235 பேருக்கும், பாலிடெக்னிக் மாணவர்கள் 3 லட்சத்து 77 ஆயிரத்து 235 பேருக்கும், அய்.டி.அய். (தொழிற்கல்வி) மாணவர்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 341 பேருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *