மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக ஒன்றிய அரசு ரூ.3,200 கோடி வழங்க வேண்டும்

2 Min Read

அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 1 மின் கட்டமைப்பு நவீன மயமாக் கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200 கோடி நிதி உதவிக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றிய அரசின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் தலைமையில் 27.2.2025 அன்று மும்பையில் நடைபெற்ற 2ஆவது மாநில மின் துறை அமைச்சர்களின் குழு கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு அரசின் சார்பாக கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:

தடையில்லா மின்சாரம்

தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக் கவும் மின் துறையின் நிதியை மேம்படுத்தவும் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மின் துறைக்கு மின் மானியமாக ரூ.53,000 கோடி மற்றும் நிதி இழப்பீடு தொகையாக ரூ.52,000 கோடி என மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி அளவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டி செல வினங்கள் மின் வாரியத்திற்கு மிக வும் நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
பல்வேறு சீரிய முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அதிகரித்து வரும் மின்தேவை, கார்பன் உமிழ்வினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை புதிய மின் உற்பத்திக்கு பெரும் சவாலாக உள்ளது. அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் கார்பன் உமிழ் வினை தடுத்திடும் நோக்கில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு தேவைப்படுகிறது. 16ஆவது நிதிக்குழு அடுத்த 5 ஆண்டுகளுக்கான நாட்டின் பொது நிதி ஆதாரங்களை இறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், மின் துறைக்கான சிறப்பு மானியத்தின் முக்கியத்துவத்தினை நாம் ஒருகிணைந்து வலியுறுத்த வேண்டும்.

ரூ.3200 கோடி

தமிழ்நாட்டிற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தின் கீழ் மின் கட்டமைப்பு நவின மயமாக்கலுக்காக கோரப்பட்டுள்ள ரூ.3,200கோடி நிதி உதவிக்கு உடனடியாக ஒப்பளிப்பு வழங்க வேண்டும். ரைகா-புகலுர் – திருச்சூர் உயர் மின் வழித்தடத்தினை தேசியதிட்டமாக அறிவித்து அதன் படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *