திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முதலமைச்சருக்குப் பொன்னாடை அணிவித்து, இனிப்பு ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழர் தலைவருக்கு, முதலமைச்சர் அவர்கள் இனிப்பு ஊட்டி, மகிழ்ச்சியடைந்தார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

Leave a Comment