புத்தக திருவிழா

viduthalai
1 Min Read

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் நமது புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டு வருகின்றது. தந்தை பெரியாருடைய நூல்களை பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கிச் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், முனைவர் அதிரடி அன்பழகன், குமரிமாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், கழகத் தோழர் டாக்டர் கலைச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். புத்தக நிலைய ஊழியர் அருண் குமார் விற்பனையை கவனித்து வருகின்றார் 1.3.2025 வரை புத்தக திருவிழா செயல்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *