அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி

viduthalai
1 Min Read

1. Associate Professor: 8 இடங்கள். ஊதியம்: ரூ.1,31,400- 2,17,100. வயது: 45க்குள்.
2. Assistant Professor: 64 இடங்கள். ஊதியம்: ரூ.68,900-2,05,500. வயது: 40க்குள்.
3. Assistant Professor: (Pre-Law): 60 இடங்கள்.
ஊதியம்: ரூ.57,700- 1,82,400. வயது: 40க்குள்.
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள சட்டப் பாடப்பிரிவுகள் அல்லது கலை அறிவியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் அசோசியேட் புரொபசர் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்து நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டிஆர்பி) நடத்தப்படும் தமிழ் மொழி திறனறியும் தேர்வு, முக்கிய பாடப்பிரிவை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600/-. எஸ்சி/ அருந்ததியர்/ பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை இணைய வழியில் செலுத்த வேண்டும்.
www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.03.2025.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *