செய்திச் சுருக்கம்

Viduthalai
1 Min Read

பத்திரம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் இதுவரை பெற்ற நன்கொடை விவரங்களை இன்றைக்குள் சமர்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

ஒத்திவைப்பு

கனமழை காரணமாக நேற்று (14.11.2023) நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பதவிக்கு விண்ணப்பித் தவர்களுக்கு வரும் 19ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடை பெறும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்.

அட்டவணை

அரசுப் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் 2 நாளில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

நெறிமுறைகள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை உண வகங்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறி முறைகளை உணவுப் பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ளது.

கலந்தாய்வு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சலிங் டிசம்பர் 20ஆம் தேதி நடக்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.

உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று முந்தைய நாள் 59.73 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 60.07 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 24.73 டிஎம்சியாக உள்ளது.

பரிந்துரை…

கலப்படம் செய்யப்பட்ட உணவு, குளிர் பானங்களை விற்போருக்கு குறைந்த பட்சம் 6 மாதம் சிறை தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும் விதிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

பட்டயப் பயிற்சிக்கு…

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com  என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆசிரியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *