பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்

1 Min Read

திருச்சி,பிப்.20- பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் 16.02.2025 அன்று காலை 10 மணியளவில் பாச்சூர் கடுக்காத்துரை கிராமத்தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை துவக்கி வைத்து சிறப்பித்த இம்மருத்துவ முகாமிற்கு மாவட்டக் காப்பாளர் ப.ஆல்பர்ட், பாச்சூர் மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனலட்சுமி கண்ணன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ச.இராசேந்திரன் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஆ.கனகராஜ் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு.பி. மஞ்சுளா வாணி ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனைகளை பெரியார் மணியம்மை மருத்துவமனை செவிலியர்கள் செய்ததுடன் மருந்து மாத்திரைகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.

இப்பொது மருத்துவ முகாமில் 73 பெண்கள் 44 ஆண்கள் என மொத்தம் 117 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *