குமரி மாவட்டத்தில் முதல் முறையாக ஜாதி, மத மற்றவர் என்று சான்றிதழ் பெற்ற தோழருக்கு மாவட்ட கழகம் பாராட்டுகள்
குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பரக்குன்று பகுதியைச் சேர்ந்த தந்தைபெரியார் பற்றாளர் தோழர் த. அருள்குமார் விளவங்கோடு வட்டாட்சியரிடம் இருந்து ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார். அவருக்கு குமரி மாவட்ட கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் மற்றும் தோழர்கள் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.