ப.சிதம்பரம் கண்டனம்
சென்னை, பிப்.18 மும்மொழிக் கொள்கையை ஏற்று, ஹிந்தி மொழியைக் கற்காவிட்டால், தமிழ்நாட்டுக்கு நிதியைத் தரமாட்டோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்‘ தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
மும்மொழிக் கொள்கையை ஏற்று ஹிந்தி மொழியைக் கற்பிக்கா விட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரி யாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரச மைப்புச் சட்டம் உருவாகிய வர லாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது.
மாநில அரசின் மொழிக் கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை. ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?. ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவ கர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தந்த உறுதிமொழிகளாவது அவருக்குத் தெரியுமா?
நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை, ஹிந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்குத் தர மாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது, நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவ ருக்குத் தெரியுமா?. தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.