வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ‘போதைப் பொருள் இல்லா சமுதாயம்’ – கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

குடியேற்றம், பிப். 17- வேலூர் மாவட்டம் குடியேற்றம் குரு ராக வேந்திரா பாலடெக்னிக் கல்லூரியில் 13.02.2025 அன்று வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “போதைப் பொருள் இல்லா சமுதாயம்” என்கிற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வி.திருமலை அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி மாவட்ட துணைத் தலைவர் பி.தனபால், குடியேற்றம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் க.சையத் அலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட மகளிரணி தோழர் ந.தேன்மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட மன நல மருத்துவர், குடியேற்றம் அரசு தலைமை மருத்துவமனை ப.சிவாஜி ராவ் ஆற்றிய சிறப்புரை யில் “போதைப்பொருள் பயன் படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்தும், புகையிலைப் பொருள்கள் குறிப்பாக பீடி, ஹான்ஸ், பான்பராக், கூல் லிப்ஸ், கஞ்சா, அபின், போதை மாத்திரைகள், மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் போன்றவற்றை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால் மாணவர்களின் உடல்நலமும், மனநலமும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்” என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக் கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *