நாக்பூர், பிப். 16- தமிழ்நாடு மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 3ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் நேற்று (15.2.2025) தொடங்கி வருகிற 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 பேர் இருந்தனர். இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, வடமாநில பயணிகள் யிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரயில் என்பதால் பெட்டிகளின் கதவுகளை தமிழ்நாடு பயணிகள் பூட்டி வைத்திருந்தனர். இதனால் ஆத்திரம டைந்த வடமாநில பயணிகள் ரயில் கதவில் உள்ள கண்ணாடியை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வந்தனர்.
பின்னர் உள்ளே வந்த அவர்களைத் தடுத்த தமிழர்களை தாக்கத் தொடங்கினர். இது சிறப்பு ரயில் என்று கூறியும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வட இந்தியர்கள் அனைத்து பெட்டிகளிலும் உடைந்த கண்ணாடி ஜன்னல் வழியாக அனைவரும் உள்ளே நுழைந்து தமிழ் பயணிகளை அடித்து துவைத்தனர். இவ்வளவு பிரச்சினை நடந்த போது அங்கு எந்த ஒரு ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது இதர காவல் படையினரோ இல்லாத நிலையில் அடிவாங்கிகொண்டே தமிழர்கள் பெருமை மிகு காசி? தமிழ்ச்சங்கத்தில் கலந்துகொள்ள பயணப் பட்டனர்.