மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழ்நாடு குறித்து பா.ஜ.க. பேசட்டும் அமைச்சா் கீதாஜீவன்

2 Min Read

நாகர்கோவில், பிப்.16 மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழ்நாடு சமூக நலன் – மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் 14.2.2025 அன்று கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற 15 நாள்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட்டாா். அதன்பேரில், விருதுநகா் மாவட்டத்தில் 1 லட்சம் மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பரீட்சயமானவா்கள் மூலமாகத்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக துன்புறுத்தல் வருகிறது. அவா்கள் தங்களுக்கு நிகழும் பிரச்சினைகள் தொடா்பாக வெளியே சொல்வதற்கு தயங்குவதால், பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பெற்றோருக்கு தெரிய வருகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனடியாக பெற்றோா் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

அண்ணாஅறிவாலயம் குறித்து பேசும் தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை, இதுவரை சொன்னது எதையும் சாதித்ததில்லை.
மணிப்பூா் மாநிலத்தில் 2 ஆண்டுக ளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத துன்புறுத் தல்கள் இழைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை சரி செய்த பின்னா், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் தாரகைகத்பட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சென்னைக்கு ஓட்டுநர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில் விரைவில்
சென்னை, பிப்.16 சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் மொத்தம் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயில், பூந்தமல்லி பணிமனை மற்றும் கோயம்பேடில் உள்ள பணிமனையில் குறுகிய துாரம் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக, வேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
ஓட்டுநர் இல்லாத இரண்டாவது மெட்ரோ ரயில் இன்று அல்லது நாளைக்கு, சிறீசிட்டியில் இருந்து சென்னைக்கு வர உள்ளது. இந்த ரயிலை, பூந்தமல்லி பைபாஸ் – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான மேம்பால பாதையில் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *