தொழில்முனைவோருக்கு சாட்ஜிபிடி பயிற்சி சென்னையில் 19-ஆம் தேதி நடைபெறுகிறது

viduthalai
1 Min Read

சென்னை, பிப்.13 தொழில் முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு சென்னையில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான ஒருநாள் சாட்ஜிபிடி பயிற்சி, சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19-ஆம் தேதி (புதன்கிழமை) நடை பெறுகிறது. சாட்ஜிபிடி மூலம் வணிக செயல் பாடுகளை எளி மைப்படுத்தி செலவுகளைக் குறைக்கவு ம், திறன்களை மேம்படுத்தவும் உதவும் வகையிலான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன.

சவால்களை எதிர்கொள்ள…

அதன்படி வணிகத் தேவைகளுக்கான சாட்ஜிபிடி ப்ராம்ட்டு களை எழுதுவது, சாட்ஜிபிடியை பயன் படுத்தி புதுமையான சந்தைப்படுத்தும் யுக்திகளை திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் உரையாடலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, வணிக செயல்திறனை துல்லியமாகக் கண் காணிக்க சாட்ஜிபிடியை உபயோகிப்பது போன்ற தொழில்முனைவோர் சவால்களை எதிர் கொள்வதற்கான தீர்வுகள் அடங்கிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் www.editn.in என்ற இணையதளத்தையும், 9080609808 மற்றும் 9841693060 ஆகிய செல்பேசி எண்களையும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட சாட்ஜிபிடி ப்ராம்ப்ட் டுகள், அவற்றை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் வாட்ஸ்-அப் சமூக அணுகலைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *