விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

விருதுநகர், பிப். 10- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் நேற்று (9.2.2025) மாலை 6 மணியளவில், அருப்புக் கோட்டை பெரியார் மாளிகையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நகரச் செயலாளர் பா.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி கூட்ட நோக்கம் மற்றும் இளைஞ ரணி அமைப்புப் பணிகள், செயல் திட் டங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். நகர அமைப்பாளர் க.சுப்பிரமணி, மாணவர் கழக அமைப்பாளர் அ.பெரியார்செல்வம், மு.முனியசாமி, பொ.கணே சன், மு.முத்துக்குமார், மு.புகழேந்தி, அ.யாழ் திலீபன் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.

மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் அமைப்புப் பணிகள், பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதெனவும், இயக்க இதழ்கள் சந்தா சேர்ப்பதெனவும், இராச பாளையம் மாவட்டம் முறம்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெருமளவில் பங்கேற்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

நிறைவாக நகர இளைஞ ரணித் தலைவர் க.திருவள் ளுவர் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *