மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை, மற்றும் வளாகம், செப்பனிடப்பட்டு சிலையைச் சுற்றி உயர்மட்ட மேடை மற்றும் புதிய படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கழக துணைத் தலைவரும் செம்பனார்கோயில் அய்யப்பன் ஹோட்டல் மற்றும் கேட்டரிங் உரிமையாளருமான தோழர் அன்பழகன் இதற்கான முழு செலவையும் தனது சொந்த பொறுப்பில் ஏற்று செய்து வருகிறார்.