கும்பமேளாவில் பலியானோரின் உண்மையான எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது மக்களவையில் அகிலேஷ் குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, பிப்.5 உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை எவ்வளவு? என்று சமாஜ்வாதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் மக்களவையில் கேள்வியெழுப்பினார்.

மூடி மறைப்பு

உயிரிழந்தோர் எண்ணிக்கையை மூடி மறைப்பதாக ஒன்றிய அரசு மீது குற்றஞ்சாட்டிய அவா், இச்சம்பவம் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி மவுனி அமாவாசை தினத்தில் ‘புனித’ நீராட கோடிக்கணக்கானோர் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் நேற்று (4.2.2025) பேசிய அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தை எழுப்பினார். ‘மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ‘எண்ம’ வசதிகள் குறித்து பெரிதாகப் பேசும் ஒன்றிய அரசு, அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைக்கிறது. மகா கும்பமேளா ஏற்பாடுகளில் தவறான மேலாண்மையை மறைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புல்டோசர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட உடல்கள்

‘புண்ணியம்’ தேடுவதற்காக வந்த மக்கள், தங்கள் அன்புக்குரியவா்களின் உடல்களோடு ஊா் திரும்பும் அவலம் நேரிட்டுள்ளது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, டிராக்டா்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ஏராளமான உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. எனவே, மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கை, அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவா்களின் இருப்பு, உணவு, குடிநீா், போக்குவரத்து வசதிகள் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும். மகா கும்பமேளா ஏற்பாடுகள் தொடா்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதோடு, அங்கு பேரிடா் மேலாண்மை நடவடிக்கைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார் அகிலேஷ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *