தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகாரம்! – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

1 Min Read

சென்னை, பிப்.2- தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வ றிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

இதற்கிடையில் தோல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத் தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என தோல் தொழிற்சாலை அதிபர்களை எச்சரித்து உள்ளது.

தமிழ்நாடு அரசின் முதலீட்டு முகமையான Guidance அமைப்பு, பல முதலீடுகளை திறம்பட ஈர்த்து வருவதாக ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், காலணி தயாரிப்புத் துறையில் Guidance அமைப்பு தைவான் நாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி யிருப்பதாகவும் முதலீட் டாளர்கள் விரும்பும் இடமாக தமிழ்நாடு ஆகியிருப்பதாகவும் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவின் காலணி மற்றும் தோல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஈடு இணையற்றது. நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த துறை 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை உருவாக்குகிறது . 80 முதல் 90 சதவீத வேலைகள் தோல் அல்லாத காலணி துறையில் உரு வாக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் முற் போக்கான கொள்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விநியோகிக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்கிறது என்பதையே ஒன்றிய அரசின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சரின் சீரிய முயற்சியால் நைக், பூமா, அடிடாஸ் மற்றும் பல்வேறு உலக காலணி உற்பத்தி நிறுவனங்களுக்கு விருப்பமான இட மாக தமிழ்நாடு உருவெடுத்து உள்ளது” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *