திருச்சி, பிப்.1 பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கோள்களின் அணிவகுப்பினை தொலைநோக்கி மூலமாகப் பார்க்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடந்து வரு கிறது.
அதன் ஒரு பகுதியாக கலாம் மாணவர் மன்றம் – திருச்சி, திருச்சி அஸ்ட்ரோ கிளப், தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி(TASS) ஆகிய அமைப்புகள் இணைந்து பெல் மனமகிழ் மன்றத்தின் ஒத்துழைப்புடன், திருச்சி பெல் நிறுவன ஊழியர் குடியி ருப்புப் பகுதியில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் கோள்க ளின் அணிவகுப்பைப் பார்க்கும் நிகழ்வு கடந்த 29 ஆம் தேதியன்று நடைபெற்றது.
பெல் மனமகிழ் மன்ற நிர்வா கிகள் முன்னிலை வகிக்க இந்நிகழ்வை நிறுவனத்தின் பொது மேலாளரும், மனமகிழ் மன்றத் தலைவருமான இரவீந்திரன் மற்றும் மகளிர் மன்றத் தலைவர் சாந்தி ஆகியோர் துவக்கி வைத்த னர்.
கலாம் மாணவர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமையில் அம்மன்றத்தினர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
TASS அமைப்பின் சாந்தி, ரமேஷ், திருச்சி அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் ஜெயபால், மோசஸ் ஆகியோர் 5 தொலை நோக்கிகளுடன் நிகழ்வைச் சிறப்பாக நடத்தினர்.
நூற்றுக்கணக்கான பெல் ஊழியர்களின் குடும்பங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.
மாணவர் மத்தியில் அறிவி யல் பார்வையையும், சமூக அக்கறையையும் வளர்க்கும் நோக்குடன் கலாம் மாணவர் மன்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.