காவேரிப்பட்டணம் மு.தியாகராசனின் (1.2.2025) பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் இல. ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, முருகன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.