திருச்சி-பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாள் வீரவணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

1 Min Read

திருச்சி – பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாள் வீரவணக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தியாகிகள் நாளான 30.01.2025 அன்று காலை 11 மணியளவில் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் சுதந்திரப் போராட்டத்திற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர். முன்னதாக காந்தியாரின் நினைவு நாளினை தியாகிகள் நாளாகவும் தொழுநோய் ஒழிப்பு நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற எவ்வித பாகுபாடிமின்றி அனைவரும் மனிதநேயத்தோடு தீண்டாமையினை ஒழிக்க பாடுபட வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *