பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. 29.01.2025 அன்று சென்னை சுந்தரம் க்ளேட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் செந்தில் இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்து கொண்டு 65 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்

Leave a Comment