பிற இதழிலிருந்து…மங்கிப்போகும் மாநில சுயாட்சி!

Viduthalai
5 Min Read

மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் குறைக்கப்படுவதால் மாநில சுயாட்சி சிதைக்கப்படுகிறது!

பி. வில்சன்
மாநிலங்களவை
உறுப்பினர்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டுறவையும் ஒருங்கிணைவையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தின் அடித் தளத்தை அச்சுறுத்தும் சவால்கள் பாஜக ஆட்சியில் அதிகரித்து வருகின்றன. கூட்டாட்சித் தத்துவம் படிப்படியாக மங்கி, நிச்சயமற்ற இருட்டிற்குள் நுழைகிறதெனப் பலர் நம்புகிறார்கள். இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
இந்திய அரசமைப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே நுட்பமான அதிகாரச் சமநிலையை உருவாக்குகிறது. அண்ணல் அம்பேத்கர், 1948இல் அரசமைப்பு நிர்ணய சபையில் பேசுகையில், அரசமைப்பின்படி ஒன்றிய, மாநில அரசுகளின் ஒவ்வொரு நிறுவனமும் இறையாண்மையுடன் கூடிய தனித்த அதிகாரங்களுடன், இந்திய ஒன்றியத்தின் மத்தியில் ஒன்றிய அரசும், அதன் சுற்றுப்புறத்தில் மாநிலங்களும் இருக்கும் எனத் தீர்மானித்தார்.

கூட்டுறவுக் கூட்டாட்சியை மய்யப்படுத்தும் இப்பார்வை ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இது மாநிலத்தின் சுயாட்சிக்கு மதிப்பளித்து மய்யப் படுத்தப்பட்ட நிர்வாகத்தை அனுமதிக்கும் நிர்வாகக் கட்டமைப்பாகும். இந்த இருமை பலதரப்பட்ட தேசத்தில் ஒற்றுமையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. அரசமைப்பு செயல்பாட்டுக்கு வந்தபோது, மாநிலங்களின் சுயாட்சிக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தரப்படும் என்று உறுதி கூறப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த காலம் தொட்டு, சமகாலம் வரையிலான நிகழ்வுகள், அனைத்து அதிகாரங்க ளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக மாற்றப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்து கின்றன. அதன்விளைவாக மாநில சுயாட்சி எனும் அரசமைப்புக் கனவு தொடர் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பும் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது.

பிற இதழிலிருந்து...

குறைந்து வரும் மாநில அரசுகளின் நிதிச் சுதந்திரம் மாநில சுயாட்சி தாக்குதலுக்கு உள்ளாவதைக் காட்டும் குறிகாட்டிகளில் ஒன்றாக விளங்குகிறது. பொருளாதாரக் கொள்கைகள், நிதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களில் மாநிலங்களின் மீது ஒன்றிய அரசு அளவில்லாத அதிகாரத்தை செலுத்துகின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிய பங்களிப்பைவழங்கும் தென் மாநிலங்கள் தங்கள் செலுத்தும்வரியை விட மிகக் குறைவான தொகையேஒன்றிய அரசிடமிருந்து திரும்பப் பெறுகின்றன.
ஒன்றிய அரசின் பொருளாதார ரீதியான தாக்குதல் மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்காமல் இருப்பது வரை நீள்கிறது. ஒன்றியத்தில் ஆளும் கட்சியுடன் கொள்கை ரீதியாக மோதும் மாநில அரசுகளுக்கு குறைவான நிதி ஆதாரமே வழங்கப்படுகிறது. இத்தகைய நிதிப் பாகுபாடு மாநில சுயாட்சியை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலங்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்மையும் அதிகரிக்கிறது.

14 ஆவது நிதிக் குழு மாநிலங்களுக்கான பங்கீட்டை அதிகரிக்கப் பரிந்துரைத்தாலும், ஒன்றிய அரசின் திட் டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லாத மேல்வரி (Cess), கூட்டுவரி (Surcharge) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன.
சரக்கு, சேவை வரி (GST) மாநில, ஒன்றிய அரசுகளின் மாறுபட்ட வரிகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அது செயலுக்கு வந்தபோது ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. சரக்கு, சேவை வரி (GST) ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரம் அளித்ததுடன், மாநிலங்களின் சொந்த வருவாய்த் திறனையும் குறைத்து ள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 23 விழுக்காடு பங்களிக்கக் கூடிய மேல்வரி (Cess), கூட்டுவரி (Surcharge) ஆகியவை மாநிலங்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய தொகுப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இவ்வரி வருவாய் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. மேலும், ஒன்றிய அரசு மாநிலங்களின் கடன் வாங்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ போன்ற கொள்கைகள் கூட்டாட்சி முறை ஒழித்து, மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இக்கொள்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் புறக்கணிக் கின்றன. இப்போக்கு நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகி றது. ஒரே நாடு ஒரே தேர்தல் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் என்று கூறப்பட்டாலும் ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட தேசிய வளர்ச்சி கவுன்சில் போன்ற நிறுவனங்கள் வெறும் சம்பிரதாயங்களாக மாறிவிட்டன. திட்டக் குழு நிதி ஆயோக்காக மாறியதால், நிதித் திட்டமிடல், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் மாநிலங்களின் பங்கைக் குறைக்கும் வகையில் ஒன்றியமயமாக்கலை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

பிற இதழிலிருந்து...

மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் இருந்த கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகள் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றியதால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலை. மானியக் குழு நியாயமற்ற விதிமுறைகள் மூலம் மாநில அரசின் பல்கலைக்கழகங்களைக் தன்னாட்சித் திறனை சிதைக்கும் வழிமுறைகளை மாறியுள்ளன. அதே வேளையில் ஒன்றிய அரசின் கொள்கைகளைச் செயல்படுத்தவும் முயலும் வழிமுறைகளாகவும் செயல்படுகின்றன.
ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநில அரசுகளின் மீது சுமத்த முயல்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதி வழங்கப்படாமல் இருக்கும் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் மாநில அரசுகளின் சுயாட்சியை ஒன்றிய அரசு கட்டுப் படுத்துகிறது.
கூட்டாட்சிக் கட்டமைப்பின் ஒரு அங்கமான இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுகிறது. 348 ஆவது அரசியலமைப்பு பிரிவு இந்தி பேசாத மாநிலங்களின் மொழியியல் விருப்பங்களுக்கு மதிப்பளித்து, ஹிந்தியுடன் சட்டமியற்றும் நோக்கங்களுக்காக ஆங் கிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இருப்பினும் இந்தியில் மட்டுமே சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் போக்கு 348 ஆவது அரசியலமைப்பு விதியை மீறுகிறது. அதிகரித்து வரும் ஹிந்தி திணிப்பு தென், வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கலாச்சார, மொழியியல் தனித்தன்மைகளைச் சிதைக்கிறது.

மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல, மாறாக ஒருவரின் அடையாளம், அரசு நிர்வாகம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன. மற்ற மொழிகளை விட ஹிந்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஒன்றிய அரசு கூட்டுறவு கூட்டாட்சிக் கொள்கைகளைச் சிதைத்து, மக்கள்தொகையில் பெரும் பகுதியினரைப் புறக்கணிக்கிறது.
சமூக நீதி, இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் ஆகிய வற்றிலும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மாநில சுயாட்சியைப் புறந்தள்ளு கின்றன. கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய உதவும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் ஒன்றிய அரசின் செயல் மற்றொரு வெளிப்படையான தோல்வியாகும். கடந்த 1931இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர் இதுவரை ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெ டுப்பு நடத்தப்படவில்லை. ஆகையால் தற்போதைய இந்தியாவின் உண்மையான நிலவரம் வெளிப்படவில்லை. ஒன்றிய அரசு ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுக்க மறுப்பதன் மூலம், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்கும் மாநில அரசுகளைத் தடுக்கிறது.

இறுதியாக, கூட்டாட்சித் தத்துவச் சிதைவு பல்வேறு சவால்களை முன்வைத்து, மாநில சுயாட்சி, சமூகச் சமத்துவம் ஆகியவற்றை அச்சுறுத்துகிறது. அரசியலமைப்பின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்இவ்வேளையில் இப்பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பது, பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் ஜனநாயகத்தையும் நிர்வாகத்தையும் பாதுகாப்பதில் முக்கியமானது.
(அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து
75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, The Week ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ள பிப்ரவரி சிறப்பு மலரில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழி யாக்கம் இது.)

நன்றி: ‘முரசொலி’ 29.1.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *