வஞ்சிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு 100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்!

1 Min Read

சென்னை,ஜன.28- நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளது.

ஒன்றிய அரசு போதுமான நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்காததால் ஏற்கனவே 2 மாத ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில் கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2024-2025 பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடியை ஒதுக்கியிருந்தது ஒன்றிய அரசு. 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1056 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி தவிர கூடுதல் நிதியை ஒதுக்காததால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல முறை கோரிக்கை வைத்தும் 100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசு மூடுவிழா நடத்த முயற்சி நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *