தமிழ்நாட்டின் மகத்தான தொழில் வளர்ச்சி உலக நாடுகளின் பாராட்டு!

Viduthalai
1 Min Read

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

சென்னை,ஜன.27- தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:
‘டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொரு ளாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்! இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அற்பதனமாக அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி.

ஆட்சித் திறன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 1960-61ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-2024-ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் சராசரி 2023-2024இல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-24-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் ஆட்சித் திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது.

உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ ‘கிண்டி’த் தருவதை ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *