நிதி மேலாண்மை வளர்ச்சிக்கான முதலீட்டுத் திட்டம் அறிமுகம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன,26- இந்தியாவின் பிரபல நிதி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகிய எல்.அய்.சி. மியூச்சுவல் ஃபண்ட், பங்கு வர்த்தகம், கடன் பாத்திரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் எல்.அய்.சி. எம்.எஃப். பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய ஃபண்டில் 2025 ஜனவரி 24-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம். பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள், கடன் மற்றும் பணச் சந்தை முதலீடுகள் மற்றும் தங்க பரிமாற்ற ஃபண்ட்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன வளர்ச்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முதலீட்டு நோக்கமாகும்.
இந்த நிதி வெளியீடு குறித்து எல்.அய்.சி. மியூச்சுவல் ஃபண்ட் சொத்து மேலாண்மை லிமிடெட்டின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான

ஆர்.கே.ஜா கூறுகையில், “பன்முக சொத்து ஒதுக்கீட்டு நிதியங்கள் இப்பொழுது அதிகமாக பிரபலமாகி வருகின்றன, இது செறிவு அபாயங்களைக் குறைத்து சொத்துகளின் சிறந்த பன்மைப்படுத்தலை உறுதிப்படுத்துகிறது.
இந்நிறுவனத்தின் நிதி முதன்மை முதலீட்டு அதிகாரி (பங்கு) நிகில் ருங்டா இதுகுறித்து கூறுகையில், ” பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்ட் என்பது வளர்ச்சிக்கான பங்குகளின் சக்தியையும் கடனிலிருந்து வருமான ஈட்டுதலையும் பொருட்களின் நிலைத்தன்மையையும் இணைக்கும் ஒரு தீர்வாகும்.

இது நிதிச் சந்தைகள் நிலைத்த தலைமையில் இல்லாமல் மாறக்கூடிய சமயங்களில் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கான சமச்சீர் பாதையை வழங்குகிறது. ஒரே நேரத்தில் 3 சொத்து வகைகளிலும் முதலீடு செய்ய விரும்பும் மற்றும் சம பங்கு திட்டங்களைவிட குறைந்த நிலையற்ற தன்மை கொண்ட தன்மை வேண்டும் என்று கருதும் முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *