பேசுவது ஆளுநர் ரவிதானா?

1 Min Read

சென்னை, ஜன.22 கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல் அனைத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பான சூழல் டில்லியில் இல்லை.

பெண்களுக்கு டில்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலத்த வர், தமிழ்நாட்டைப் பாது காப்பானதாக கருதுகின்றனர். அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் ஜாதிய சண்டைகள் அதிகம் நிகழ்கின்றன. இது மிகுந்த வருத்த மளிக்கிறது என தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து அவருடைய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் இவ்வாறு புகழ்ந்து பேசியுள்ளது ஆச்சரியம்தான்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *