திருவனந்தபுரம், ஜன. 21 தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாநிலக்குழுவில் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யுஜிசியின் விதிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் முதலமைச்சரின் கடிதத்தின் தீவிரத்தை உணர்ந்து முதல் மாநிலமாக யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.