ரயில்வே முன்பதிவில் முறைகேடு: 5 ஆயிரம் பேர் கைது ரூ.53 கோடி மதிப்புள்ள பயணச் சீட்டுகள் பறிமுதல்

1 Min Read

சென்னை, ஜன. 21- நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவில் முறை கேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவில் முறைகேடு

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை கண்காணிப்பாளர்

ஜி.எம்.ஈஸ்வர ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்பனை செய்வதை தவிர்க்க ரயில்வே பாதுகாப்புப் படை இணைய குற்றப்பிரிவு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,725 வழக்குகளில் 4,975 போலி முகவா்கள் மற்றும் கள்ளச் சந்தை விற்பனையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ரூ.53 கோடி
பயணச் சீட்டுகள் பறிமுதல்

அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்புள்ள 1,24,529 பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், தட்கல் மற்றும் மொத்த முன்பதிவில் (பல்க் புக்கிங்) முறைகேட்டில் ஈடுபட்ட 26,442 அய்ஆா்சிடிசி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயா்மட்ட அளவில் குற்றச்செயலில் ஈடுபட்ட கும்பல்கள் கலைக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை

எதிர்வரும் காலங்களில் பயணச் சீட்டு முன்பதிவை கண்காணிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதில், ஒரு அய்பி முகவரியிலிருந்து அல்லது விபிஎன் பயன்படுத்தி பல முன்பதிவு செய்யும் நபா்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கிறோம்.

முன்பதிவு மய்யங்களில் ஒரே நபா் அதிக பயணச்சீட்டு பெறுவதைத் தவிர்க்க கைரேகை முறை (பயோமெட்ரிக் முறை) கொண்டுவரப்படும்.
பயணச் சீட்டுகள் அனைத்தும் மேகக் கணிமை (ஃக்ளவுட் கம்ப்யூட்டிங்) முறையில் சேமிக்கப்படும். இந்த தரவுகள் மூலம் குற்றச்செயல்கள் நடைபெற்ற வழிகள் கண்டறிந்து தடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *