கருநாடக அரசின் கோரிக்கை நிராகரிப்பு காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி,ஜன.21- காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் திட்டத்திற்கு கண்டிப்பாக தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டமானது கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதற்கு ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘வரைவு திட்டங்கள், அதில் இருக்கும் சாதக பாதகங்கள் ஆகியவை குறித்த ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரிமாறிக் கொள்வதோடு, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நிராகரிப்பு

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் உமாபதி மற்றும் குமணன்,’ காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கருநாடக அரசு முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் வழங்கி வருகிறது.
மேலும் திட்டம் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கருநாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “தமிழ்நாட்டின் காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டத்திற்கு இடைக்காலமாக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் இருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்கப்படவில்லை.

அப்படி இருக்கும் போது திட்டத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும். அது சாத்தியமே கிடையாது. இந்த விவகாரத்தில் கருநாடக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது.

மேலும் காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *