கரட்டாம்பட்டி, ஜன.16 9.1.2025 மாலை துறையூர் அருகே கரட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம் முன் கழக சார்பில் தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தலைமைக் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமை தாங்கி தொடக்க உரை ஆற்றி னார். மாவட்ட துணைத்தலைவர் முசிறி மா.ரத்தினம் மாவட்ட இளை ஞரணி தலைவர் ச.மகாமுனி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் க.ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொன்னுசாமி. இ.கம்யூனிஸ்ட் விஏஒ. செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.