விருதுநகர், ஜன.16 விருதுநகர் கழக சார்பில், ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி அறிவிப்பும், ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கியும் பிரச்சாரக் கூட்டம் 10.1.2025 அன்று மாலை 6 மணிக்கு, மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில், கழகப் பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் முன்னி லையில் நடைபெற்றது.
மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் வரவேற்புரையாற்றினார். இராஜபாளையம் மாவட்ட கழகத் தலைவர் பூ.சிவகுமார் ‘‘மந்திரமல்ல தந்திரமே’’ அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினார். இராஜபாளையம் மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், மாவட்ட கழகத் தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் உரைக்குப் பின், கழகச் சொற்பொழிவாளர் தே.நர்மதா வைக்கம் போராட்ட வரலாறு குறித்தும், வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாட்சி, ‘திராவிட மாடல்’ அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கியும் சிறப்புரையாற்றினார்.
நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தன பாலன், சி.பி.அய். நகரச் செயலாளர் கே.எஸ்.காதர்மைதீன், மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி, அருப்புக்கோட்டை நகர செயலாளர் பா.இராசேந்திரன், ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், மாணவர் கழக அமைப்பாளர் அ.பெரியார்செல்வம், முத்துக்குமார், விருதுநகர் இராஜா, காரி யாபட்டி ஒன்றியம் ஆதிமூலம் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிறைவாக மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் இரா.அழகர் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.