தேனி மாவட்ட கழக காப்பாளர் போடி இரகுநாகநாதன் அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தாதேவி – ரகு நாகநாதன் இணைய ரின் பெயர்த்தியும் போடிநாயக் கனூர் நகர தலைவர் பொறியாளர் ரகு.பெரியார்லெனின்-நாகஜோதி இணையரின் மகளுமான யாழினி 18ஆம் ஆண்டு பிறந்தநாள் (15/01/2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1000 வழங்கியுள்ளார்.
– – – – –
திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்துவின் புதல்வர் வை.நற்குணநிதி மதுரை மாவட்ட மய்ய நூலகம் நடத்திய “திருக்குறள் வினாடி வினா” போட்டியில் வென்ற பரிசுத் தொகையிலிருந்து ரூ.1000/- பணத்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். நன்றி!
– – – – –
மாவட்ட காப்பாளர் குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் அன்னையார், புவனேஸ்வரிப்பேட்டை, கிளாஸ்பீடி பேக்டரி நிறுவனர்கள் சரஸ்வதி பெரியசாமி இணையரின் 22ஆவது ஆண்டு நினைவு நாள் நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 500 அன்பளிப்பு வழங்கியுள்ளார்.