சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூக தகுதியுள்ள வழக்குரைஞர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வல்,பி.சி.அய்.சேர்மன் மணன்குமார் மிஸ்ரா ஆகியோரை பார் கவுன்சில் துணைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், பார்கவுன்சில் துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன், பார்கவுன்சில் உறுப்பினர்கள் கே.பாலு, ஆர்.அய்யாவு, அசோக், தாளமுத்தரசு, சிறீமுருகா ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் நா.மாரப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி கூட்டமைப்பின் சார்பில் பொருளாளர் க.முரளிபாபு ஆகியோர் சந்தித்து பார்கவுன்சில் சார்பிலும் கூட்டமைப்பின் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.