தகவல் அறியும் உரிமைச் சட்டம் குழப்பத்தை ஏற்படுத்தும் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜன.11 தகவல் அறியும் உரிமைச் சட்ட இணையதளத்தில் முறையீட்டு மனுவின் நிலையை அறிய புதிய நடைமுறை அமல்படுத் தப்பட்டிருப்பது குழப்பம் ஏற் படுத்துவதாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் மோடிக்கு எஸ்.ஆா்.எம்.யூ. மதுரை உதவி கோட்டச் செயலா் ராம்குமாா் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறப் பட்டு இருப்பதாவது:

தகவல் உரிமை சட்டம்

அரசின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலற்ற நிா்வாகத்தையும் உறுதி செய்யும் வகையில், அரசு சாா்ந்த அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 2005-இல் தகவல் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, தகவல் உரிமை சட்ட இணையதளம் மூலம் எந்த ஒரு சாதாரண குடிமகனும் தனக்குத் தேவையான தகவலைப் பெற முடியும்.

ரூ.10 பதிவுக் கட்டணம் செலுத்தி, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேவைப்படும் தகவலை கோரலாம். இதையடுத்து, ஓா் பதிவு எண் தொடா்புடைய மனுதாரருக்குக் கிடைக்கும். பிறகு, அந்தப் பதிவு எண், கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, தனது கோரிக்கை மனு மீதான நிலையை மனுதாரா் அறிய லாம். இந்த நடைமுறையே பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.

இந்த நிலையில், 2025 ஜன. 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. பதிவு எண், கைப்பேசி எண் ஆகிய வற்றை உள்ளீடு செய்து மனுவின் நிலையை அறிய முயலும் போது, மனுதாரரின் மின்னஞ்சலுக்கு ஒருமுறை கடவுச் சொல் (ஓ.டி.பி) வருமாறு தற்போது நடைமுறை மாற்றப்பட்டிருக்கிறது.

வங்கி, ஆதாா் போன்ற நடைமுறை களின் போது வாடிக்கையாளா்களின் கைப் பேசிக்கே ஒருமுறை கடவுச் சொல் அனுப்பப்படும். அதுவும் ஓரிரு வினாடிகளில் அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்து, பரிவா்த்தனையை நிறைவு செய்யலாம். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருமுறை கடவுச் சொல் மனுதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இந்தக் கடவுச் சொல் எத்தனை நொடிகளில் கிடைக்கப் பெறும்?, அதன் பயன்பாட்டு நேரங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. 3 நாள்களுக்கும் மேலாக கூட கடவுச் சொல்வராத நிலையும் உள்ளது. இதனால், பதிவு செய்யப்பட்ட கோரிக்கை மனு எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற எந்த விவரத்தையும் மனுதாரா் அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ரத்து செய்ய வேண்டும்

இந்தக் குழப்பம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீா்த்துப் போகச் செய்யக் கூடியதாகிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இது, தகவல் அறியும் சட்டம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் குலைக்கக் கூடியதாக உள்ளது. எனவே, குழப்பத்தை ஏற்படுத்தும் புதிய நடைமுறையை ரத்து செய்து, பழைய முறையை மீண்டும் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *