தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், நேற்று (07.01.2025), சென்னை, தலைமைச் செயலகத்தில், எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, சிறப்பு செயலாளர் வ.கலையரசி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் மு.விஜயலட், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பி.உமா மகேஸ்வரி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (ESI) இயக்குநர் மரு.இளங்கோ மகேஸ்வரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.