தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், நேற்று (07.01.2025), சென்னை, தலைமைச் செயலகத்தில், எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, சிறப்பு செயலாளர் வ.கலையரசி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநர் மு.விஜயலட், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பி.உமா மகேஸ்வரி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (ESI) இயக்குநர் மரு.இளங்கோ மகேஸ்வரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில், எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:மா.சுப்பிரமணியன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books