சீனாவில் வைரஸ் தொற்று
அச்சப்பட தேவையில்லை
‘‘சீனாவில் வழக்கமாக குளிர் காலத்தில் சுவாசத் தொற்றை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான் பரவி வருகிறது. இதுகுறித்து சீனாவுக்கு வரும் பயணியர் அச்சப்படத் தேவையில்லை’’ என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
வானில் இருந்து விழுந்தது
500 கிலோஉலோகம்
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெரிய அளவில் வட்ட வடிவிலான 500 கிலோ எடையிலான உலோகம், வானில் இருந்து விழுந் தது. அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற் படுத்தியது. இது விண்வெளி குப்பை என அந் நாட்டு விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு
நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களி்ன சிறப்பு அம்சங்கள், ஆசிரியரின் சிறப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை பெற்றோருக்கு எடுத்துரைத்து பள்ளி ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும். அதற்காக ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலக வாழ் தமிழர் புத்தாண்டு
நாளாக அறிவிக்க கோரிக்கை
தை முதல் நாளை உலக வாழ் தமிழர் புத்தாண்டு நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ‘எக்ஸ்னோரா’ நிறுவனர் எம்.பி. நிர்மல் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயிர்களை சேதப்படுத்தும்
பன்றிகளை பிடிக்க நடவடிக்கை
‘‘விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க சட்டப் பேரவையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும்’’ என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாலங்கள் கட்ட நிதி ஒப்புதல்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 15 உயர்நிலைப் பாலங்கள் கட்டவும், 7 மாவட்டங்களில் இரு வழிப்பாதை, சாலை அகலப்படுத்துதல் போன்ற 22க்கும் மேற்பட்ட பணிகளுக்கு ஒன்றிய சாலை, உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் (சிஆர்.அய்.எஃப்) நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்.
நீதிமன்ற விசாரணைக்கு
ஆஜராகாதது குற்றமே
‘‘நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டப் பூர்வ அறிவிப்பை ஒருவர் பின்பற்றாதது குற்றமே’’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி
அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள், இந்தியாவில் அரசு நீதித் துறை அகாடெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
நாகை மீனவர்கள் 9 பேர் மாயம்
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 9 பேர் சென்ற படகு பழுதானதால், காற்றின் வேகத்தில் இலங்கை பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. மீனவர்களையும், படகையும் மீட்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் – 5 பணக்காரர்கள்
2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி நாட்டில் உள்ள முதல் 5 பணக்காரர்களின் பட்டியல். 1) முகேஷ் அம்பானி – ரூ.10 லட்சம் கோடி
2) கவுதம் அதானி – ரூ.59.86 லட்சம் மோடி
3) சாவித்ரி ஜிண்டால் – ரூ.3.7 லட்சம் கோடி
4) ஷிவ் நாடார் – ரூ.33.4 லட்சம் கோடி 5) திலீப் சங்வி – 32.7 லட்சம் கோடி.
இந்திய ராணுவத்தில்
ரோபோ நாய்கள்
இந்திய ராணுவத்தின் சார்பில் 3 நாள் ராணுவ கண்காட்சி, கடந்த 3ஆம் தேதி புனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ராணுவ உபகரணங்கள் கண் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில் காட்சிப்படுத்தப்பட்ட ரோபோட்டிக் நாய்கள், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. உலக நாடுகள் அதிநவீன போர் யுக்திகளை வகுத்து வரும் நிலையில், இந்தியாவும் அடுத்த தலைமுறை ஆயுதங்களை களமிறக்கி விட்டுள்ளது.