சி.பி.எம். கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு

1 Min Read

விழுப்புரம், ஜன. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடந்த மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கே.பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந் ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கே பாலகிருஷ்ணன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 72 வயது ஆனவர்களுக்கு செயலாளர் பதவி கொடுக்கப்படாது என்றும், ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற விதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளது.

இதனால் கே.பாலகிருஷ்ணன் ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்து உள்ளதாலும், அவருக்கு தற்போது 71 வயது ஆகிவிட்டதாலும் இந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் 24ஆவது மாநில மாநாடு கடந்த 2 நாட்களாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மாநில செயலாளராக ஒருமனதாக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக் குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *