தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில்,
அரசமைப்புச் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டப்பேரவை ஜனநாயகத்தின் மரபு! அதை மீறு வதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர்.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறு பிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
‘‘தனது அரசமைப்புச் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!
–இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.