வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

1 Min Read

புதுடில்லி,ஜன.5- நாட்டில் குளிர்கால பருவநிலை ஆரம் பித்துள்ளது. தென் மாநிலங்க ளில் வழக்கம் போல மிதமாக உள்ள குளிர் வட மாநிலங்களில் பனிப் பொழிவாக வாட்டி வருகிறது.
ஹிமாச்சல், உத்தராகண்ட், அரியானா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் இயல்புநிலையை பாதிக்கும் அளவிற்கு உள்ளது.

தலைநகர் டில்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 3.1.2025 அன்று காலை சுமார் 100 விமானங்கள் புறப் படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல விமானங்களின் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் 3.1.2025 அன்று மதியம் முதல் விமான சேவை சீரானதாக செய்திகள் வெளியா கின. விமான பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் தங்களின் பயணம் குறித்துத் தெளிவு பெற டில்லி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.

12 மணிக்கு மேல் வாகனங் களை இயக்க முடியவில்லை வடமாநிலங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனிமூட்டம் நிலவுவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்க ளை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக திணறி வருகின்றனர்.
பனிமூட்டத்தால் அதிகாலை நேரங்களில் அதிகமாக விபத்து நிகழ்வதால் வாகன ஓட்டிகள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவதில்லை. இதனால் வடமாநிலங்களில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *