காசா மீது நேற்று (2.1.2025) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தொடங்கிய அடுத்த நாளே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காவல் துறையினர் உள்ளிட்ட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காசாவில் அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.