பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான்மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 Min Read

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.1.2025) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில், சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான்மார்ஷலுக்கு சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வின்போது, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், தொல்லியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கிரெக் ஜாமிசன், கா. ராஜன், நயன்ஜோத் லஹிரி, ஆர். பாலகிருஷ்ணன், டோனி ஜோசப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *