மல்லிகார்ஜூன காா்கே சாடல்
புதுடில்லி, ஜன.5 அரச நெறியைப் பின்பற்றாமல் அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறி ழைத்துவிட்டாா் பிரதமா் மோடி. இதிலிருந்து அவா் தப்பிக்க முடியாது’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
மணிப்பூா் விவகா ரத்தில், பிரதமா் மீது இந்த விமா்சனத்தை காா்கே முன்வைத்தாா். மேலும், பா.ஜ.க.வின் சுய நலத்தால் மணிப்பூா் பற்றி எரிகிறது என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூரில் அண்மை யில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகள் தொடா்பான ஊடக செய்திகளைப் பகிா்ந்து, ‘எக்ஸ்‘ வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஓயாத வன்முறை
பிரதமா் மோடி கடைசியாக கடந்த 2022, ஜனவரியில் மணிப்பூா் பேரவைத் தோ்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றாா். 2023, மே மாதத்தில் அங்கு கல வரம் வெடித்தது. 600 நாள்களுக்கு மேலாகியும் வன்முறை ஓயவில்லை.
ஒவ்வொரு கிரா மமாக அழிவை எதிா்கொண்டுவருவது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வருகிறது. காங்போக்பி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தாக்கப்பட்டு, காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் காயம டைந்துள்ளனா். பா.ஜ.க.வின் திறமையற்ற முதலமைச்சரோ, மணிப்பூருக்கு பிரதமா் வரவில்லை என்பதை வசதியாக மறந்துவிட்டு, எந்த அவமானமும் இன்றி மன்னிப்புக் கோரி யுள்ளாா்.
அழகு ததும்பும் எல்லை மாநிலமான மணிப்பூரை பற்றி எரியச் செய்த தீக்குச்சி பா.ஜ.க. இம்மாநிலத்தை கொந்தளிப்புடன் வைத்திருப்பதில் பா.ஜ.க.வுக்கு சில சுய நலன்கள் அடங்கி யுள்ளன. மணிப்பூரில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிா்கள் பறிபோய்விட்டன; 60,000-க்கும் மேற்பட்டோா் வீடுகளை விட்டு இடம்பெயா்ந்து, 20 மாதங்களாக நிவா ரண முகாம்களில் வாழ்கின்றனா்.
மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பதே ஒன்றிய-மாநில அரசுகளின் முதல் பொறுப்பு என்று உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது.
பிரதமர் தலையிடவில்லை
கடந்த டிசம்பா் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சாா்பில் பிரதமருக்கு 3 எளிமையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 2024 முடிவதற்குள் மணிப்பூருக்கு பிரதமா் செல்ல வேண்டும்; அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் பிரதமா் அலுவலகத்துக்கு அழைத்து பேச வேண்டும்; மணிப்பூா் பிரச்சி னையில் பிரதமா் நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற அந்த கோரிக்கைகளில் ஒன்றைக்கூட பிரதமா் நிறைவேற்றவில்லை. அரச நெறியை கடைப்பிடிக்காமல், அரசமைப்புச் சட்ட ரீதியில் தவறிழைத்துவிட்ட பிரதமா், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று காா்கே தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, மணிப்பூரில் நீடித்து வரும் இனமோதலுக்காக மக்களிடம் மன்னிப்புக் கோரிய முதலமைச்சர் பிரேன் சிங், அனைவரும் கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.