ஒன்றிய அரசு ஆணைப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை தொடங்க உள்ளது. இதற்காக ‘பார்மர்ஸ் ரிஜிஸ்டரி’ என்ற பெயரில் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை வைத்து தான், வரும் காலங்களில் விவசாயத்திற்கு தேவையான உதவிகளை ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும்.
விவசாயிகளுக்கு ஆதார் போல அடையாள எண்!

Leave a Comment