தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியல் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டது

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன. 4 தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டிய லின்(என்இடிஎல்) திருத் தப்பட்ட பதிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆா்) நேற்று முன்தினம் (2.1.2025) முன்மொழிந்தது.
இந்த பட்டியலை முதன்முதலில் கடந்த 2019-ஆம் ஆண்டு அய்சிஎம்ஆா் வெளியிட்டது. .
இந்நிலையில், இந்த பட்டியலை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் பல்வேறு உள்ளீடுகளுடன் அய்சி எம்ஆா் தற்போது வெளி யிட்டுள்ள திருத்தப் பட்ட வரைவில் குறிப்பிட்டுள் ளதாவது:

நீரிழிவு, மலேரியா, காசநோய், எச்அய்வி மற்றும் சிபிலிஸ் போன்ற 9 வகையான நோயறிதல் சோதனைகள் கிராம அளவிலான சுகாதார மய்யங்களில் கிடைக்க வேண்டும். ஆயுஷ்மான் ஆரோக்கிய திட்டங்களை இந்த 9 சோதனைகளுடன் கூடுதலாக ‘ஹெபடைடிஸ்-பி’ சோதனைகளையும் வழங்க வேண்டும். டெங்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், எக்ஸ்ரே, ஈசிஜி பரிசோதனைகள் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இருக்க வேண்டும்.

மாவட்ட மருத் துவமனைகள் சிடி ஸ்கேன், எம்ஆா்அய், மேமோகிராபி, எக்கோ கார்டியோகிராபி ஆகிய பரிசோதனைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கிராம அளவிலான சுகாதார மய்யங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள், ஆரம்ப சுகாதார மய்யங்கள், சமூக சுகாதார மய்யங்கள், துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத் துவமனைகள் என அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் இந்த பரிந்துரைகள் வழங் கப்படுகின்றன. இந்த புதிய திருத்தப்பட்ட வரைவு பல்வேறு தரப்பினா் மற்றும் நிபுணா்களின் கருத்துகளுக்காக பொது தளத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *