பிரகாஷ் காரத்
காட்பாடி, ஜன. 4 மத அடிப்படையில் மக்களைப் பிரித்து சாதகமாக்கிக் கொள்ள பா.ஜ.க. செயல்படுகிறது. இதைத் தடுக்க மதச் சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கி ணைப்பாளா் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு நேற்று (3.1.2025) காலை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மாலையில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் என்.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, டி. ரவீந்திரன் முன்னிலை வகித்தனா்.
பொதுக்கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:
ஒன்றிய பாஜக அரசு வகுப்பு வாத அரசாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில்
ஆா்.எஸ்.எஸ். கோட்பாடுகளை செயல்படுத்துகின்ற வகையிலேயே அதன் செயல்பாடுகள் உள்ளன.
ஒன்றிணைக்க வேண்டும்
மத அடிப்படையில் மக்களைப் பிரித்து, அதை தங்களுக்கு சாதக மாக்கிக் கொள்ளும் வகையில் பா.ஜ.க. செயல்படுகிறது. இதைத் தடுக்க மதச் சார்பற்ற மக்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும்.
மேலும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக உள்ளது. இதனால், சமூக, பொரு ளாதார ஏற்றத் தாழ்வு ஏற்படு
கிறது.
பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்று தனது உரையில் தெரிவித்தார்.