தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்-பரப்புரைக் கூட்டங்கள்

viduthalai
9 Min Read

தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள், “வெற்றி முழக்கம்” தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி! திராவிட மாடல் அரசு வரலாற்று சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் விவரம் வருமாறு:

அரக்கோணம்

திராவிடர் கழகம்

30-12-2024 திங்கட்கிழமை மாலை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் வெற்றி முழக்கம், தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாள், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில் சொ.ஜீவன்தாஸ் முன்னிலையில் அனைவரையும் வரவேற்றார். அரக்கோணம் நகர செயலாளர் க.சு. பெரியார் நேசன், தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைத்தார் அரக்கோணம் நகர தி.மு.க. செயலாளர் வி.எல்.ஜோதி, அண்ணல் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து பேருரை நிகழ்த்தினார் SC&ST UNION தலைவர் பேராசிரியர் காகனம் கலைநேசன், பெரியார் கூட்டமைப்பின் பொறுப்பாளர் கல்லாறு அன்பு, நல்லாசிரியர் விருது பெற்ற சு.பாண்டியன், ம.தி.மு.க நெமிலி ஒன்றியத்தின் செயலாளர் கெ.ஆறுமுகம், காவேரிப்பாக்கம் போ.பாண்டுரங்கன், மணிதநேய மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ்.முஹம்மது அலி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கே.நரேஷ்குமார், அரக்கோணம் ஒன்றியத்தின் வி.சி.க.செயலாளர் ச.சி.சந்தர், மேனாள் மாவட்ட தலைவர் வி.சி.க.வின் க.கவுதமன் ஆகியோரின் உரைக்கு பின் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரை நிகழ்த்தினார். முன்னதாக தொடக்க உரையை தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் நிகழ்த்தினார்.

மேலும் திராவிடர் கழக தி.மு.க, வி.சி.க., காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி தோழர்கள், அம்பேத்கர் இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள் டி.ஆர்.இராமன், கே.கோவிந்தராஜ், ஆர்.மோகன்ராஜ், வாலாஜாபேட்டை ந.இராமு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, மாவட்ட செயலாளர் கி.இளையவேல், ப.க.தலைவர் இளம்பரிதி, திருவள்ளூர் மாவட்ட ப.க.தலைவர் சி.நீ.வீரமணி, அவருடைய வாழ்விணையர் தமிழ்ப்பிரியா (எ) ஷாலினி, பாடகர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இனணச்செயலாளர் அறிவுச் செல்வன், தோழர் போஸ், ம.தி.மு.க. ஏ.ஞானப்பிரகாசம்,ஏ.சு.ராஜா, பாரதிதாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கரூர்

திராவிடர் கழகம்

கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு,கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் குறித்த கழக பொதுக்கூட்டம் கரூர் காந்தி கிராமம் இரட்டை டேங்க் அருகில் கரூர் மாவட்ட கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி தலைமையில் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ராமசாமி வரவேற்று பேசினார். மாவட்ட காப்பாளர் வே. ராஜு, மாவட்ட செயலாளர் ம, காளி முத்து, பொதுக்குழு உறுப்பினர் சே. அன்பு, கட்டளை உ. வைரவன், ம. ஜெகநாதன், ஆகியோர் முன்னிலை பொறுப்பேற்றனர். நிகழ்ச்சியில் கழக பேச்சாளர் தே. நர்மதா, மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு. சேகர், ஆகியோர் வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டம், திராவிட மாடல அரசின் சாதனைகள், கேரள மாநிலத்தில் நடைபெற்ற வைக்க நூற்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும், கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களும், வரலாற்று சிறப்புமிக்க நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று பேசினர்.

மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ், அமைப்பாளர் காந்தி கிராமம் சா.குமார், துணைத் தலைவர் நைஸ் சபாபதி, ச. ராஜா, ம. காமராஜ் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு தலைவர், ம. அரியநாயகம் விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளர், வழக்குரைஞர் பெ. ஜெயராமன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மேலிட மறு சீரமைப்பு பொறுப்பாளர், தமிழன் குமாரசாமி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் ஏசுதர், மாணவர் கழக தலைவர் பெரியார் செல்வம், செயலாளர் விக்னேஷ், துணைத் தலைவர் கவியரசு, மாவட்ட மகளிர் பாசறைஅமைப்பாளர் அம்பிகா, ராமலிங்கம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா பெருமாள், கடவூர் ஒன்றிய செயலாளர் கார்த்திக், விடுதலை,நிகழ்ச்சியில் திமுக, தமிழ் உணர்வாளர்கள் மாற்றுக் கட்சி நண் பர்கள் கலந்து கொண்டனர். நன்றி உரையை மாவட்ட மாணவர் கழக செய லாளர் விக்னேஷ் கூறினார்.

ஆத்தூர்

ஆத்தூர் திராவிடர் கழக சார்பில் வாழப்பாடியில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவுநாள் வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு கேரளா முதலமைச்சர்களுக்கு நன்றி, திராவிட மாடல் அரசின் சாதனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 92ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் கொட்டவாடி பெரியசாமி அய்யா அவர்களின் நினைவு மேடை அமைக்கப்பட்டு 27.12.2024 அன்று மாலை 6 மணியளவில் வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் ப. வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி வீரன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவின் தொடக்கமாக மறைந்த மேனாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஓரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது . மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை மாவட்ட காப்பாளர் இரா. விடுதலை சந்திரன் அவர்கள் சிறப்பாக நடத்தினார்

மாவட்ட மகளிரணி தலைவர் அமிர்தம் சுகுமார், மாவட்ட செயலாளர் நீ. சேகர், தொழிலாரணி மாவட்ட தலைவர் காரிப்பட்டி மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

மாவட்ட தலைவர் த. வானவில் மற்றும் தலைமைகழக அமைப்பாளர் ஆத்தூர் அ. சுரேஷ் தொடக்க உரை யாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் மறைந்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் படத்தினை திறந்து வைக்கப்பட்டது.

கழக பேச்சாளர் காஞ்சி கதிரவன் சிறப்பான உரையாற்றி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.சிறப்பு அழைப்பாளர் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து தோழமை உணர்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பக தலைமை கழக அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன் , பக மாவட்ட தலைவர் வ. முருகானந்தம் பக மாவட்ட செயலாளர் அ. அறிவு செல்வம். கொட்டவாடி பெரியசாமியின் குடும்பத்தார் பக பொறுப்பாளர் விஜய் ஆனந்த் ரமேஷ். கவுரி சங்கர், வேணுகோபால் மற்றும் இன்னும் ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தனர். மாவட்ட தொழிலாளரணி செயலாளர் சிங்கிபுரம் கூத்தன் அனை வருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.

காரைக்கால்

திராவிடர் கழகம்

தந்தை பெரியார் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள் வைக்கம் போராட்ட வெற்றி முழக்கம் தமிழ்நாடு கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கழக பொதுக்கூட்டம் காரைக்கால் மாவட்ட கழகத்தின் சார்பில் 27.12.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் காரைக்கால் கப்பப்பா காலனி அருகில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த அனை வரையும் மாவட்ட துணை செயலாளர் ஜெ.செந்தமிழன் வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர்பதிஜெய் சங்கர், மாவட்ட துணை தலைவர் ராஜரத்தினம், மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ்பியர், மாவட்ட மாணவர் கழக தலைவர் மோகன்ராஜ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்திருந்தனர்.

மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம் தொடக்கவுரை யாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, புதுச் சேரி மாநில கழக தலைவர் சிவ.வீரமணி உரையாற்றிய பின் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சு.சிங்காரவேலு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுக மாவட்ட இளைஞரணி தலைவர் ஜவகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பொன். செந்தமிழ் செல்வன், சிபிஅய் மாவட்ட செயலாளர் ப. மதியழகன், மதிமுக மாவட்ட செயலாளர் சோ.அம்பலவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் நசீர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், சமூக நீதிக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் வின்சென்ட் ராஜ், மாநில மனித உரிமை அமைப்பாளர் ராஜா முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பெரியார் பெருந்தொண்டர்கள் ராமலிங்கம், பன்னீர், கலையரசன், மகளிர் அணி சிறீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி நன்றி கூறினார். பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தென் சென்னை-மந்தைவெளி

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் செயின்ட் மேரிஸ் பாலம், மந்தைவெளி ரயிலடி அருகில் ‘27.12.2024, வெள்ளிக்கிழமை, மாலை 6.30 மணி அளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா வெற்றி முழக்கமும்’, ‘தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள்’ கூட்டமும் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.மாரிமுத்து தலைமை தாங்கினார். முன்னதாக அறிவுமானனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரா.வில்வநாதன்(மாவட்டத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன்(மாவட்டத் துணைத் தலைவர்), கோ.வீ.ராகவன், சா. தாமோதரன் (துணைச் செயலாளர்) ஆகியோர் முன்னிலையேற்றனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரை ஆற்றியதற்கு பின்பாக கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

இறுதியாக கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி தந்தை பெரியாரின் போராட்டங்களையும் தொண்டினையும் விளக்கிக்கூறி எழுச்சி உரையாற்றினார்.

தந்தை பெரியார் அவர்கள் கேரள மக்களின் அழைப்பை ஏற்று வைக்கம் சென்று போராட்டம் நடத்தியதையும் இதனால் சிறை கொடுமை அனுபவித்ததையும், தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மையாரும் கலந்து கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியதையும் எடுத்துக் கூறி அந்தப் போராட்டம் வெற்றி பெற்று இன்று நூற்றாண்டு நிறைவு விழா அதே வைக்கத்தில் 12.12.2024இல் தமிழ்நாடு முதலமைச்சர்ர் மு. க. ஸ்டாலின் மற்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோரின் பங்கேற்புடன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி .வீரமணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றதை விரிவாக எடுத்துக் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து பேசியதோடு, இது போன்ற நிகழ்ச்சி இன்று மட்டும் தான் நடந்திருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது இதற்கு முன்னதாக கூட பல நிகழ்ச்சிகள் நடந்து இருக்கலாம். ஆகையால் காவல்துறையின் முழுமையான விசாரணை தேவையென அறிவுறுத்தினார்.

கல்வியை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது, விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரால் ஜாதியை வளர்க்க முயற்சிக்கிறது, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற விடாமல், கல்வி கற்க விடாமல் தடுத்து அவர்களின் ஜாதி தொழிலை செய்ய வற்புறுத்துகிறது.

இந்த திட்டத்தை ஏற்காத தமிழ்நாடு அரசை பாராட்டுகிறோம் என குறிப்பிட்டு பேசினார். அனைவரும் தந்தை பெரியாரின் பணியை மேற்கொண்டு, பயணிக்க வேண்டும் என்று கூறி சிறப்பானதொரு உரையை நிகழ்த்தினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், வி.வளர்மதி (மகளிர் அணி தலைவர்), பி.அஜந்தா (மகளிர் அணி செயலாளர்), மு.பவானி (மகளிர் பாசறை தலைவர்), நொச்சி நகர் ஜெ.சொப்பன சுந்தரி, மாணவர் கழக வி.யாழ்ஒளி, அர. அண்ணாதுரை, நல். இராமச்சந்திரன், மயிலை ஈ.குமார், கோட்டூர்புரம் ச.தாஸ், ஆவடி மாவட்டத் துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன், ஓட்டேரி பெரியார் பித்தன், குன்றத்தூர் மு.திருமலை, சு. செல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி செயலாளர் ந. மணிதுரை நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *