போடியில் தந்தை பெரியார் குருதிக் கொடை கழக சிறப்பு முகாம்

2 Min Read

போடி, ஜன. 2- தந்தை பெரியாரின் 126ஆவது பிறந்தநாள் விழா தகைசால் தமிழர் பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 92ஆவது பிறந்தநாள் மனிதநேய நாளாக போடியில் தந்தை பெரியார் குருதி கொடை கழகம் சிறீ கணேஷ் பள்ளி யில் 24ஆம் ஆண்டு 25ஆவது குருதி கொடை முகாமை சிறப்பாக நடத்தியது.
அரிமா சங்க வட்டார செயலர் அரிமா பாலாஜி தலைமையில் போடிநகர திராவிட முன்னேற்ற கழக செயலாளர் புரு ஷோத்தமன் முகாமை தொடங்கி வைத்தார். போடி நகர்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி சங்கர் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். வருகை தந்த அனைவரையும் பொதுக்குழு உறுப்பினரும் பேபி சாந்தாதேவி வர வேற்றார். தலைவர் ரகு நாகநாதன் சேவை மய்யத்தின் செயல்பாடு குறித்து பேசினார்.

போடிநாயக்கனூர் அரிமா சங்க பொறுப்பா ளர்கள் நவநீதன், பாலாஜி, பாண்டியன், செழியன், விக்னேஷ் மற்றும் உறுப்பி னர்கள், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் வி.பி.வேல்ராஜ், அண்ணா திமுக நகர செயலாளரும் மேனாள் நகர்மன்ற தலைவருமான பழனிராஜ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய செயலாளர் முசாக் மந்திரி சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன், சிபிஅய் நகரச் செயலாளர் சத்யராஜ், மதிமுக நகர செயலாளர் ஆரோ செல்வம், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஆண்டிபட்டி ஸ்டார் நாகராஜ், ஆண்டி பட்டி நகர செயலாளர் ஆண்டிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பெரியகுளம் ம.பெ.மு. அன்புக்கரசன், பெரியகுளம் மணி கார்த்திக், நேசம் அறக்கட்டளை முருகன், போடி நகர கழக தலைவர் பெரியார்லெனின், செயலா ளர் முருகானந்தம், கூடலூர் கருப்பு சட்டை நடராஜன், கழக தோழர் பால்பாண்டி, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வஜ்ரவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் பெரியார் காமராசர் படம் பொறித்த தினசரி நாட்காட்டியுடன் குடையை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. முகாம் சிறப்பாக நடத்த முழு பொறுப்பேற்று உழைத்த மாவட்ட கழக தலைவரும் பெரியார் சேவை மய்ய நடத்துனருமான சுருளி ராஜ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *